tamilni 218 scaled
இலங்கைசெய்திகள்

நோய் அறிகுறிகள் தென்படுமாயின் அவதானத்துடன் செயற்படுங்கள்!

Share

நோய் அறிகுறிகள் தென்படுமாயின் அவதானத்துடன் செயற்படுங்கள்!

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வாய், கைகள் மற்றும் கால்களில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் காணப்படுமாயின் வைரஸ் வேகமாக பரவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நோயினால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாரம் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளானது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் (UNICEF) மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...