tamilni 218 scaled
இலங்கைசெய்திகள்

நோய் அறிகுறிகள் தென்படுமாயின் அவதானத்துடன் செயற்படுங்கள்!

Share

நோய் அறிகுறிகள் தென்படுமாயின் அவதானத்துடன் செயற்படுங்கள்!

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வாய், கைகள் மற்றும் கால்களில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் காணப்படுமாயின் வைரஸ் வேகமாக பரவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நோயினால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாரம் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளானது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் (UNICEF) மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...