9 36
இலங்கைசெய்திகள்

விசா செயலாக்கம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை

Share

விசா செயலாக்கம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை

வெளிநாட்டு நிறுவனத்திற்கு விசா செயலாக்கத்தை வழங்கியதில் (அவுட்சோர்சிங் செய்ததில்) சர்ச்சைக்குரிய “இ-விசா” மோசடி குறித்து அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு கூட்டமைப்பை விலக்கி, இணைய விசா விண்ணப்ப தளத்தை அரசாங்கம் மீண்டும் செயலாக்கியுள்ளது

முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவின் விசா ஒப்பந்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஒப்பந்தம் வெளிப்படையாக வழங்கப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இது தொடர்பிலேயே உயர் நீதிமன்ற தீர்ப்பும் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...