tamilni 297 scaled
இலங்கைசெய்திகள்

நெல் கையிருப்பில் 10 கோடி ரூபா இழப்பு

Share

நெல் கையிருப்பில் 10 கோடி ரூபா இழப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 05 களஞ்சியசாலைகளில் இருந்து நெல் இருப்புக்கள் காணாமல் போனமை தொடர்பில் 03 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் பல பருவங்களில் அவ்வப்போது கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊழியர்கள் குழுவொன்று விவசாய அமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களின் சில அதிகாரிகளும் அரிசி இருப்பு காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ உள்ளிட்ட 05 களஞ்சியசாலைகளில் கொள்வனவு செய்யப்பட்ட அரிசி கையிருப்பு காணாமல் போயுள்ளதாகவும், அந்த கையிருப்புகளின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....