செய்திகள்இலங்கை

உலக அழகி போட்டியில் அநீதி! – இலங்கை பெண் புஷ்பிகா டி சில்வா

Share
Pushpika de Silva
Share

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அதில் கலந்து கொண்ட போட்டியாளர் புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அப் போட்டியில் அநீதிகள் இழைக்கப்பாடமல் இருந்திருந்தால் நானே திருமதி அழகுராணி மகுடத்தை வென்றிருப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தனது சமூக வலைத்தளக் கணக்கிலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மனிதர்களாகிய நம்மை அனைவருக்கும் மேலாக கடவுளும் இயற்கையும் சோதிக்கும் நேரம் இது. கொரோனா வைரஸ் போன்றவற்றின் மூலம் அமைதி, தியாகம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும் என்பதை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய தருணம் இது.

சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த திருமதி உலக திருமண அழகி போட்டியில் கலந்து கொண்டேன். அங்கு நான் இறுதிச் சுற்று வரை வெற்றிகரமாகப் போட்டியிட்டேன். எனினும் சில தரப்பிலிருந்து அநீதி இழைக்கப்பட்டது. வழக்கம் போல் எனக்கு கிடைக்க வேண்டிய அவ் வெற்றியை இழக்க செய்தவரை கடவுள் மன்னிக்கவும்.

ஆனால் கடவுளின் முடிவை மாற்ற முயன்ற ஒரு மனிதனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
2 14
இலங்கைசெய்திகள்

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள் விபரம்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று...

2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...