24 6603bd3c2f086
இலங்கைசெய்திகள்

அரச வாகனங்கள் தொடர்பில் தகவல்

Share

அரச வாகனங்கள் தொடர்பில் தகவல்

இலங்கையில் அரச வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் இயங்க 300 ரூபாயை செலவிடுகின்ற நிலையில், அந்த வாகனங்களை 100 ரூபா செலவில் இயக்க முடியும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறை மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வள மேலாண்மை குறித்த மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் தரவுகளின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அரசாங்க நிறுவனங்கள் சுமார் 82,000 வாகனங்களை வைத்திருக்கின்றன. அவற்றில் சுமார் 76,000 இயங்கும் நிலையில் உள்ளன. சுமார் 5500 வாகனங்கள் இயங்கும் நிலையில் இல்லை.

ஆராய்ச்சியின் படி, இயங்கும் நிலையில் உள்ள வாகனங்களை ஒரு கிலோமீட்டர் செலுத்துவதற்கு 300 மற்றும் 500 ரூபா வரை அரச நிறுவனங்களுக்குத் தேவைப்படும்.

எனினும், இந்த வாகனங்களை தனியாரிடம் இருந்து வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் எடுத்தால் ஒரு கிலோமீட்டருக்கு 100 அல்லது அதற்கும் குறைவான தொகையே செலவாகும்.

எனவே அரசுக்கு சொந்தமான வாகனங்களை அகற்றி இந்த செயல்முறையைப் பின்பற்றினால் சுமார் 20 பில்லியன் ரூபா அரச செலவீனங்களை சேமிக்க முடியும் என்றும் குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...