24 663c51b893a99
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் தொடர்பில் தகவல்

Share

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் தொடர்பில் தகவல்

இந்திய (India) அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, 58,200 ஈழத்தமிழ் ஏதிலிகள் தமிழ்நாடு முழுவதும் 104 முகாம்களில் வசித்து வருவதோடு 33,200 இற்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களின் சிவில் ஆவணங்களைப் பொறுத்தவரையில் 95 வீதமானோர் இந்திய அடையாள அட்டைகளையும், 78 வீதமானோர் வங்கிக் கணக்குகளையும் ஒரு வீதமானோர் இலங்கைக் கடவுச்சீட்டுகளையும் 03 வீதமானோர் இலங்கை தேசிய அடையாள அட்டைகளையும் வைத்துள்ளனர்.

இந்தநிலையில் ஒரே ஒரு ஈழத் தமிழரான நளினி கிருபாகரனுக்கு மட்டுமே இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முகாம்களில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.

இருப்பினும், சுகாதார சேவைகள் அல்லது குடியுரிமைகள் கிடைக்காமல் மோசமான அகதிகள் முகாம்களில் அவர்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Share
தொடர்புடையது
20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...

19 7
உலகம்செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா: பென்டகன் முக்கிய அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 10) முன்னெப்போதும் இல்லாத வகையில்...

18 9
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மார்ச் 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப்...