7 33
இலங்கைசெய்திகள்

இந்தியா – சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Share

இந்தியா – சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவும் சீனாவும், இலங்கையின் மதிப்புமிக்க நண்பர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனான உறவுகள் முக்கியமானவை என இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவுடனான உறவுகளிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது அரசாங்கத்தின் புதிய வெளியுறவுக் கொள்கையின் பரந்த வரையறைகளை கோடிட்டுக் காட்டியதுடன், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனை தலைமையகமாகக் கொண்ட ஊடகம் ஒன்றிடம் அவர் இந்தக் கருத்துக்களை செப்டெம்பர் 3ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...