செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீடு புகுந்து வன்முறைக்கும்பல் அடாவடி! – வாகனங்களுக்கும் தீ வைப்பு – மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்!

5 8
Share

வீடு ஒன்றினுள் புகுந்த வன்முறைக்கும்பல் ஒன்றால், குறித்த வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயை வைத்து விட்டு அங்கிருந்தது தப்பிச்சென்றுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் குறித்த வீட்டுக்கு வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்று அத்துமீறி வீட்டினுள் நுழைந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளது.

5 4

அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் காருக்கும் தீ வைத்துள்ளதுடன், காரையும் அடித்து சேதப்படுத்தியுள்ளது.

குறித்த தீயில், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில் காரும் தீயால் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 5 5 1 5 2 5 3 5 7 5 6

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...