நாட்டில் தொற்று 2,915 – சாவு 185
நாட்டில் கொரோனாத் தொற்றால் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதில் 102 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் 140 பேரும் 30–60 வயதுக்கு உட்பட்டோரில் 44 பேரும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 689 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களாக மேலும் 2 ஆயிரத்து 915 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment