tamilni 7 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் IORA மாநாடு

Share

இலங்கையில் IORA மாநாடு

இந்திய பெருங்கடல் வட்டார (IORA) மாநாடு ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 23 வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் பல வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

23 பிரதான நாடுகளை தவிர IORA மாநாட்டில் கண்காணிப்பு மட்டத்தில் மேலும் 10 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.

இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், எகிப்து ஆகிய நாடுகளும் அடங்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் IORA மாநாட்டில் உலக பொருளாதார வழிமுறைகளை உருவாக்குதல், பிராந்தியத்திற்கு பொதுவான சவால்களை வெல்வது, சுற்றுலா, கலாசார துறைகளில் முன்னேற்றத்திற்கான திட்டங்களை போன்ற பிரதான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

IORA மாநாடு ஒக்டோபர் மாதம் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

11 20
இலங்கைசெய்திகள்

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

கொழும்பில் நாளை (19) நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக...