15 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை அகதி தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

Share

இலங்கை அகதி தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

இந்தியாவில் (India) 1990ஆம் ஆண்டு முதல் வசிப்பதாகக் கூறப்படும் இலங்கை அகதி ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து, அவரது மனுவை ஏற்று அல்லது நிராகரித்து உத்தரவை நிறைவேற்றுமாறு இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜேந்திரன் (Gajendiran) என்ற இந்த இலங்கை அகதி தாக்கல் செய்த குடியுரிமை விண்ணப்பத்தின் மீது 12 வாரங்களுக்குள், விண்ணப்பதாரரிடமிருந்து தேவையான அனைத்து விளக்கங்களையும் பெற்று, பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி நியாயமான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் (Anita Sumanth) உத்தரவிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தனது குடியுரிமை விண்ணப்பத்தை விரைவுபடுத்துமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரியில் வசிக்கும் மனுதாரர், விழுப்புரத்தில் உள்ள கீழ் புதுப்பேட்டை மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த காலத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதியன்று ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார்,

இப்போது அவர் ஒன்பது வயது குழந்தைக்கு தந்தையாக உள்ளார் என்று மனுதாரரின் சட்டத்தரணி எல். ரோமியோ ராய் அல்ஃபிரட் மன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் மத்திய அரசின் மூத்த சட்டத்தரணி ஜி.பாபு, மனுதாரரின் விண்ணப்பத்தில் உள்ள முரண்பாடுகளை எடுத்துரைத்தார்.

மனுதாரர் தன்னை கஜேந்திரன் என்று கூறும்போது, தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையால் வழங்கப்பட்ட அகதிச் சான்றிதழில் அவர் ஆர்.கஜேந்திரகுமார் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இரண்டு தரப்பினரிதும் சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதி குடியுரிமை விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது பெயரில் உள்ள முரண்பாடுகள் உட்பட அனைத்து விளக்கங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் பெற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...