1 4 scaled
இலங்கைசெய்திகள்

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் …! இந்திய உயர்ஸ்தானிகர் நாமல் முக்கிய சந்திப்பு

Share

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் …! இந்திய உயர்ஸ்தானிகர் நாமல் முக்கிய சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் (high commissioner) சந்தோஷ் ஜா மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் (srilanka) சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்போதும் தமிழ் சமூகத்தில் உள்ள இளவயதினருடன் தனது கட்சி நெருங்கிச் செயற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அக்கறையாக இருப்பதாகவும் மேலும் அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...