9 2 1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அரசியல் அதிர்ச்சிக்கான காரணங்களை கூறிய இந்திய வெளியுறவு அமைச்சர்

Share

இலங்கையின் அரசியல் அதிர்ச்சிக்கான காரணங்களை கூறிய இந்திய வெளியுறவு அமைச்சர்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த அரசியல் அதிர்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளின் விளைவு என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதிக்கான அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட்;( Carnegie Endowmen) ஏற்பாடு செய்த கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஏற்படும் மோதல்கள் உலகின் பிற பிராந்தியங்களில், குறிப்பாக தெற்கில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையிலும் இந்த காரணிகளின் விளைவாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசியல் அதிர்ச்சி ஏற்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் இடம்பெறும் மோதல்கள் காரணமாக உலகளாவிய பதற்றநிலை தோற்றம் பெற்றதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...