14 24
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்றையதினம் (12) கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி (Kilinochi) மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்பபடுத்தினர்.

இதன்போது குறித்த எட்டு இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 கடற்றொழிலாளர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்(M. K . Stalin) கடிதம் எழுதியுள்ளார்.

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் இன்று(12) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்தே மு.க ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் கடற்றொழில் மேற்கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதாக இன்று(12) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து கடற்றொழிலாளர்களையும் அவர்களது கடற்றொழில் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலுவான மற்றும் பயனுள்ள இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது.

இலங்கை கடற்படையினரால் கடற்றொழிலாளர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, கடற்றொழிலாளர் சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்”என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...