அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 16 பேர் கைது!

IMG 20220324 WA0004

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலையில் நெடுந்தீவு கடற்பரப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நான்கு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரணைத்தீவு கடற்பகுதி அருகே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version