12 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கோட்டாபயவை வலியுறுத்திய இந்தியா

Share

இலங்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கோட்டாபயவை வலியுறுத்திய இந்தியா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இலங்கையை விட்டு வெளியேற வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர், அந்த நேரத்தில் வற்புறுத்த முயன்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருந்தால், அதனை புதுடில்லியில் உள்ளவர்கள் வழங்கத் தயாராக இருப்பதாக கோட்டாபயவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதாலும், வன்முறையின் மூலம் அவர் வெளியேற்றப்படுவது புதுடில்லிக்கு சிறந்த விடயமாக இருக்காது என்ற அடிப்படையில் இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் முதலில் இந்தியாவுக்குச் சென்றார் என்பதும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கோட்டாபய அதனை ஏற்காது நாட்டில் இருந்து வெளியேறினார்

பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் பெற்றுள்ளமையை அடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள...

1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...