tamilni 263 scaled
இலங்கைசெய்திகள்

தூத்துக்குடி – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Share

தூத்துக்குடி – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது சிறிய வகுப்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டு நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

அத்துடன், குறித்த நிறுவனங்கள் இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை மையமாக கொண்டு பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

மேலும், தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை, தூத்துக்குடி – கொழும்பு ஆகியே இடங்களுக்கே இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 17ம் திகதி முதல் 19ம் திகதி வரை மும்பாயில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...