24 66000ed565e5a
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏழுமலையான் ஆலயத்தை நிர்மாணிக்க தீர்மானம்

Share

இலங்கையில் ஏழுமலையான் ஆலயத்தை நிர்மாணிக்க தீர்மானம்

இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததற்கமைய தேவஸ்தானம் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோவிலின் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவிலை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலகரான தர்மா ரெட்டி கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து கோவில் கட்டுவதற்கான இடங்கள் மற்றும் எவ்வளவு மதிப்பீட்டில் கோவில் கட்டுவது குறித்து ஆய்வு செய்யவிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் சில நிர்வாக காரணங்களுக்காக தர்மா ரெட்டியின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் 29 ஆம் திகதி தேவஸ்தான செயல் அலுவலகரான தர்மா ரெட்டி, இலங்கைக்கு விஜயம் செய்து கோவில் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...