2 4
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது

Share

இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏதேனும் ஓர் வகையில் போர் மூண்டால் அது இலங்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நடந்தாலும் அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அரங்கில் போர் பலம் கொண்ட இரண்டு முக்கிய நாடுகளாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் கருத முடியும் எனவும் அந்த வகையில் ஒப்பீட்டால் இலங்கை ஒர் நெத்தலி போன்றதொரு சிறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு உணவு உட்கொண்டு வாழ்க்கையை முன்னெடுப்பதாகவும், இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் அதனால் இலங்கை மக்கள் இழப்பதற்கு விசேடமாக ஏதுவுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...