27 5
இலங்கைசெய்திகள்

தீவிரம் அடையும் இந்தியா – பாகிஸ்தான் போர்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிரடி நடவடிக்கை

Share

இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.

எதிர்காலத்தில் சர்வதேச விமானங்களுக்கு கராச்சி மற்றும் லாகூரின் விமான நிலையங்கள் திறக்கப்பட்டவுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னர் மீண்டும் சேவையை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் வாரத்திற்கு சராசரியாக 8 விமான சேவைகளை பாகிஸ்தானுக்கு மேற்கொள்கிறது.

பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சிக்கு தலா 4 விமான சேவைகள் முன்னெடுப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிராந்திய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கமும் விமான நிறுவனமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பை முதன்மையான முன்னுரிமையாக கொண்டு மேலும் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...