கச்சதீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது எனப் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார.
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார
“இலங்கைத் தமிழர்கள் நலனில் பாரதிய ஜனதாக் கட்சி எப்போதும் அக்கறையுடன் செயல்படும்.
அதன் அடிப்படையில் கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்” என்று சி.பி.ராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.
#IndianNews
Leave a comment