16 13
இலங்கை

வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Share

வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் பாரிய தவறு இழைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய அணிகள் மோதிக் கொண்ட முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி சமனிலையில் நிறைவைடைந்தது.

இவ்வாறு சமனிலையில் நிறைவடையும் போட்டிகளின் போது வெற்றியை நிர்ணயம் செய்வதற்காக சுப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட வேண்டும்.

எனினும், இந்தப் போட்டியின் போது குறித்த நியதி பின்பற்றப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளுக்கு போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய ரஞ்சன் மடுகல்ல இந்தப் போட்டியின் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றியிருந்தார்.

போட்டியின் நடுவர்களாக ரவீந்திர விமலசிறி மற்றும் ஜோயல் வில்சன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.

இந்தப் போட்டியின் தொலைக்காட்சி நடுவராக போல் ரபைலும், நான்காம் நடுவராக ருச்சிர பல்லியகுருவும் கடமையாற்றியிருந்தனர்.

இலங்கை இந்திய கிரிக்கட் நிர்வாக சபைகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தால் இந்தப் போட்டித் தொடருக்கு மட்டுமான விசேட நியதிகளை அமுல்படுத்த முடியும்.

எனினும், சர்வதேச கிரிக்கட் பேரவையின் நியதிகளின் அடிப்படையில் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டால், அந்தப் போட்டியின் வெற்றி தோல்வி சுப்பர் ஓவர் மூலம் நிர்ணயிக்கப்படும்.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த நியதி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அமுல்படுத்தப்பட்டது.

இவ்வாறான ஓர் பின்னணியில் போட்டி நடுவர்கள், போட்டி மத்தியஸ்தர், தொலைக்காட்சி நடுவர் மற்றும் நான்காம் நடுவர் ஆகிய அனைவரும் இந்த சுப்பர் ஓவர் விவகாரத்தை மறந்து விட்டார்களா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நடத்தக் கூடிய சூழ்நிலை காணப்பட்டால் வெற்றி தோல்வியை சுப்பர் ஓவர் மூலம் நிர்ணயிக்க வேண்டுமென நியதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் போட்டி நியதி 16.3.1.1 இன் பிரகாரம் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றில் இரு அணிகளும் சம ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டால், அசாதாரண சூழ்நிலைகள் தவிர்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுப்பர் ஓவர் மூலம் வெற்றியை நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டியொன்று நிறைவடைந்து விட்டதனை குறிக்கும் வகையில் கள நடுவர்கள் தங்களது பக்க விக்கெட்டுகளின் பேல்ஸ்களை தட்டிவிடுவார்கள்.

இலங்கை இந்திய போட்டியின் போது இரு அணிகளும் சமனிலை ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் போட்டி முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் சைகை செய்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் போட்டி மத்தியஸ்தர், தொலைக்காட்சி மற்றும் நான்காம் நடுவர்களும் எதனையும் கூறவில்லை.

மேலும் இரண்டு அணிகளின் வீரர்களும் போட்டி நிறைவானதை குறிக்கும் வகையில் எதிரணி வீரர்களுடன் கைலாகு செய்திருந்தனர்.

இந்த சர்ச்சை தொடர்பில் இந்திய கிரிக்கட் சபையோ அல்லது ஶ்ரீலங்கா கிரிக்கட்டோ இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
w 412h 232imgid 01j9e8833zvmskxd27dc9gr2peimgname 310 job vacancies in uae and odepec conducts recruitment with free visa accomodation and insurance
செய்திகள்இலங்கை

ரூ. 740 மில்லியனுக்கும் அதிகமான மோசடி: ருமேனிய வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்!

ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடமிருந்து 740 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி...

25 690615b57da4a
செய்திகள்இலங்கை

மோசமான நிர்வாகத்தின் விளைவு: இலங்கை ஆட்சி மாற்றம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து!

வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...

23 64e4c01e53a82
செய்திகள்இலங்கை

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம்: அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 25 முக்கிய கடத்தல்காரர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகப் பொதுப்...

images 4
செய்திகள்இலங்கை

பெரிய வெங்காயம் கொள்வனவில் அளவு அளவிடப்படுவதில்லை: ‘கண் மட்டத்தில்’ மட்டுமே ஆய்வு – லங்கா சதோச விளக்கம்!

விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ள லங்கா சதோச கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் அளவு...