rtjy 182 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை எதிர்நோக்குவது கடன் பொறி அல்ல

Share

இலங்கை எதிர்நோக்குவது கடன் பொறி அல்ல

இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது ‘கடன் பொறி’ அல்ல மாறாக ‘அபிவிருத்தியற்ற பொறி’ என சீனத் தூதுவர் குய் தெரிவித்தார்.

மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் சீனா இன்னும் முழுமையாக ஈடுபாட்டை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையுடன் ‘கடன் இராஜதந்திரம்’ என்று அழைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக்கொள்கிறது.

கடந்த செவ்வாயன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் புவிசார் அரசியல் உயர்மட்ட குழு கலந்துரையாடல் ஒன்று, கொழும்பில் உள்ள சில உயர்மட்ட இராஜதந்திரிகள் மத்தியில் நடத்தப்பட்டது.

இதில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சீனத் தூதுவர் கி ஜென்ஹாங், பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பெக்டெட் மற்றும் ஜப்பானியத் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஸி ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது ‘கடன் பொறி’ அல்ல, மாறாக ‘அபிவிருத்தியற்ற பொறி’ என்பதை சீனத் தூதுவர் குய் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினார்.

சீனா எப்போதுமே இலங்கையின் மூலோபாய மற்றும் நம்பகமான பங்காளியாக இருந்து வருகிறது. மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது.

இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவத்தைப் பாதுகாப்பதில் சீனாவும் உறுதியாக ஆதரவளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சீனத் தூதருக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்தியா ஒரு ‘வல்லமையம்’ என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் இந்த விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றம் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியா மற்றும் அதன் தலைமையின் தற்போதைய முயற்சியை பொறுத்தவரை, பிராந்தியத்தின் பங்கை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் பிற ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவது என்பதாகும் என்று பாக்லே தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...