பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதாக லேடி
ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்
பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பாடசாலைகளை மீண்டும் மூடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் தொகை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம் என்றும் குழந்தைகள் மத்தியில் கொரேனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பாடசாலைகள் மீண்டும் மூட வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகரித்தால்,பயணத்தடைகள் மீள அமுலுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.
இதனால் வீட்டிலும் வெளியிலும் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன் , குழந்தைகளின் நலன்களிலும் அக்கறை செலுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment