சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

sri lanka tourism begins destination brand recovery process 2019 05 01 1000x600 1

கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் நாட்டுக்கு 30,207 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.இந்த எண்ணிக்கை ஜூன் மாதம் 32, 865ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, முதல் அரையாண்டில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.

இதற்கமைய இந்தியாவிலிருந்து 6,650 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,199 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,448 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Exit mobile version