நாட்டில் பருப்பின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி சந்தையில் பருப்பின் விலை தற்போது 250 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்படுகின்றது.
இந் நிலையில் அங்கு விளைச்சல் குறைந்து காணப்படுகின்ற காரணத்தால் பருப்பின் விலையை அதிகரிப்பதற்கான சாத்தியம் எழுந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.