24 66120837d81e0
இலங்கைசெய்திகள்

சுகாதாரத் துறையினருக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

சுகாதாரத் துறையினருக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கையின் சுகாதாரத் துறையின் தாதியர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உத்தியோகபூர்வ ஆடைக் கொடுப்பனவான 15,000 ரூபா 10,000 ரூபா அதிகரிக்கப்பட்டு 25,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்திற்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை மே மாதத்திலும் அடுத்த வருடத்திற்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை அதே வருடம் மார்ச் மாதத்திலும் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலேரியா கட்டுப்பாட்டு உதவியாளர், பொது சுகாதார கள அலுவலர், பூச்சியியல் உதவியாளர், பற் சிகிச்சையாளர் பணியிடங்களுக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 10,300 ரூபா முதல் 17,000 ரூபா வரை 6,700 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 14,000 ரூபா உதவித்தொகை 9,000 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 23,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கால்நடை தடுப்பூசி போடுபவர்கள் மற்றும் இளநிலை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 9,300 ரூபா உதவித்தொகை 5,700 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...