இலங்கைசெய்திகள்

எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

Share
LITRO
Share

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவாலும் மற்றும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாய் ஆகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1904 ரூபாய் ஆகவும் மற்றும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...