lakshman kiriella
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு! – நாடாளுமன்றில் விவாதம்

Share

” மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல சபையின் கவனத்தை ஈர்த்தார்.

மின்சார கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபைக்கு அனுமதி நேற்று வழங்கியுள்ளது.

அதற்கமைய, முதல் 30 அலகுகளுக்கு 264 வீதத்தாலும் 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 211 வீதத்தாலும் 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 125 வீதத்தாலும் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

91 முதல் 120 அலகுகள் வரை 89 வீதத்தாலும் 121 முதல் 180 அலகுகள் வரையான மின் பாவனைக்கு 79 வீதத்தாலும் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

” இன்று முதல் கட்டண அதிகரிப்பு அமுல் எனக் கூறப்படுகின்றது, இதனை ஏற்கமுடியாது, விலை அதிகரிப்பு அமுலாக முன்னர் அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் அவர்கள் தற்போது மின்சார கதிரையிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.” – என கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

அதேவேளை, பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டண உயர்வானது, அவர்களின் வாழும் உரிமையை சவாலுக்குட்படுத்தும் நகர்வாகும் என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அரசியல்வாதிகள் மற்றும் சில அதிகாரிகளின் முறையற்ற நடவடிக்கையால்தான், இலங்கை மின்சார சபை நஷ்டத்தில் இயங்கிகுகின்றது, எனவே, அதன் சுமையை மக்கள்மீது திணிப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல எனவும் குறிப்பிட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...