201371 dengue
இலங்கைசெய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

Share

மத்திய மாகாணத்தில்  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மூன்று மாவட்டங்களில் இவ்வருடம் இது வரை 1,057 டெங்கு நோயாளர்கள அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மத்திய மாகாணத்தில் தற்போது இடைக்கிடையே பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் காணப்படுவதாகவும் மக்கள் இயன்றளவு தமது சுற்றாடலை துப்பரவு செய்து நுளம்புகளை இல்லாமலாக்க வேண்டும் என்றும் சுகாதார பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

2023ம் ஆண்டு இது வரையில் கண்டி மாவட்டத்தில் 740  டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 273 டெங்கு நோயாளர்களும்  நுவரெலிய மாவட்டத்தில் 44 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் தமது சுற்றாடலை  துப்பரவு செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்  இது தொடர்பாக அவதானமாக இருப்பார்கள் என்றும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 129
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் கால உணவுப் பாதுகாப்பு: 800-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை பொது...

world 128
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு: டாலர் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் கவலை!

மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதால்...

world 127
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு உதவ சீனா என்றும் தயார்: அக்குரானாவில் சீன மொழி மையத்தைத் திறந்து வைத்து தூதர் உறுதி!

இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு சீனா தொடர்ந்து ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதர் கி...

world 126
செய்திகள்உலகம்

ஈரானிய துறைமுக முற்றுகையை ஆதரிக்கவில்லை: இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல்வழி முற்றுகை நடவடிக்கையை ஐக்கிய இராச்சியம் ஆதரிக்கவில்லை என்று...