sarath fon
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆடிய ஆட்டம் அடங்கும்; அரசு கவிழ்ந்தே தீரும்! – பொன்சேகா சூளுரை

Share

“ராஜபக்ச அரசு ஆடிய ஆட்டங்கள் அடங்கப் போகின்றன. இந்த அரசைக் கவிழ்க்கும் எமது பிரேரணை வெல்லப்போகின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பெரும்பான்மைப் பலம் கிடைத்துள்ளது.

எதிரணியில் உள்ளவர்களும் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படுவர்களும் மற்றும் அரசுக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களும் என 113 இற்கும் மேற்பட்டோர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகவுள்ளனர்.

எனவே, இந்த அரசு உடனடியாகக் கெளரவமாகப் பதவி விலக வேண்டும். இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக இந்த அரசை அகற்றுவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...