இலங்கைசெய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

Share
20 16
Share

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

2023/24 ஆண்டில் உள்நாட்டு இணைவரித்திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 868,009 ஆக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் W.A. செபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

2022/2023 மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி செலுத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 333,313 ஆகும்.

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) பதிவு செய்வதற்கும், தனிநபர்களை வருமான வரிக்கு பதிவு செய்வதற்கும் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் விளைவாக, உள்நாட்டு இணைவரி சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் 3.05.2023 அன்று வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்bருந்தது.

இதன்படி, வருமான வரி செலுத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 534,696 ஆக அதிகரித்துள்ளது.

வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் போன்றவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது வருமான அறிக்கைகளை இணையவழி முறையின் மூலம் சமர்ப்பிக்க முடியும் என்றும், பணம் செலுத்தும் பட்சத்தில் தபாலில் பணம் செலுத்தும் சீட்டு அனுப்பப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இணைய முறையைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவோருக்கு சிரமம் இருந்தால், அவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அல்லது திணைக்களத்தின் பிராந்திய அல்லது நகர அலுவலகங்களுக்கு சென்று உதவியை பெறலாம் என்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...