download 11 1 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Share

கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பிறப்பத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு பிறப்பத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் போது தவற விடப்பட்ட பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் சட்ட ஆவணங்களை பெற்றுக் கொடுக்கும்பொருட்டு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பல்வேறுபட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் அரச திணைக்களங்களுடன் இணைந்து பல்வேறு நடமாடும் சேவைகளை மேற்கொண்டு ஆவணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

ஆனாலும் தற்போது மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாமலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளனர்.

குறிப்பாக கோனாவில் பாடசாலையில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிறப்பத்தாட்சி பத்திரம் இன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவர் இல்லங்களில் உள்ள குறிப்பிட்ட சில சிறுவர்களுக்கும் இவ்வாறு பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக கடந்த 2007ஆம் 2008ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டாலும் அதன் பிரதிகள் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் அவற்றின் பிரதிகள் பெற முடியாத சூழல் காணப்படுகின்றது.

“இதுவரை பிறப்பத்தாட்சிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

இது தொடர்பாக பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாதவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அந்த விபரங்களின் படி பிறப்பு சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...