விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் யுத்த காலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட புலிகளின் ஆவணங்களே இவ்வாறு அடையாளம் காணப்படுள்ளன.
முள்ளிவாய்க்கால் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பாதுகாப்புத் தரப்பினர் குறித்த பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் அடையாள அட்டை வயர், பற்றரிகள் உள்ளிட்ட ஆகிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகள் பயன்படுத்திய முக்கிய ஆவணங்களே இவ்வாறு நந்திக்கடல் களப்பு பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.