24
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Share

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

கடந்த சில நாட்களாகப் தொடர்ந்த வெள்ள நிலைமை தணிந்து வருகின்ற போதிலும், தொற்று அல்லாத நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வெள்ளம் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் ஊற்று நீரை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஊற்று அல்லது கிணற்று நீரை பயன்படுத்தும் போது பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியம் எனவும் நன்கு கொதித்தாறிய நீரை பருக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் இந்தக் காலத்தில் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்,தொற்று மற்றும் தொற்றாத நோய்களில் இருந்து சிறு குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கொழும்பு, லேடி ரிஸ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...