தற்போது நிலவும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, மேலும் இரு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என்று லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
எரிவாயுக் கப்பலொன்று, மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையால், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டுப்படுத்தப்பட்ட ளவில் சில பகுதிகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், சில பகுதிகளுக்கு போதுமான அளவு எரிவாயு கிடைக்கவில்லையென நுகர்வோரும், எரிவாயு விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment