articles qpcBmXQx7m9HprVlfDny scaled
இலங்கைசெய்திகள்

286 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்! 

Share

நாட்டில் 286 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் எந்தப் பிரச்சினையும் வராது என நம்புகிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

செலவழிக்க வேண்டிய டொலர்களின் அளவு

இதன்போது, சுமார் 286 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் மீண்டும் தளர்த்தப்பட்டுள்ளன, மேலும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் படிப்படியாக முடிவுக்கு வர உள்ளன. இது நமது அந்நியச் செலாவணி கையிருப்பை கடுமையாகப் பாதித்து மேலும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இதை நாங்கள் மிகவும் கவனமாகச் செய்து வருகின்றோம். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாயை அதிகரிக்க வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனத் துறைசார் மேற்பார்வைக் குழுவொன்றில் கூறப்பட்டிருப்பதை ஊடகங்களில் காணக்கூடியதாகவிருந்தது.

இருப்பினும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். அந்த 286 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் நாட்டின் தேவைகள் உட்பட ஒவ்வொரு துறையையும் கலந்தாலோசித்து, கடந்த ஐந்தாண்டுகளின் பதிவேடுகளைப் பார்த்து ஆண்டுக்கு செலவழிக்க வேண்டிய டொலர்களின் அளவையும் மதிப்பீடு செய்தோம்.

அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, 286 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் எந்தப் பிரச்சினையும் வராது என நம்புகிறோம் என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...