douglas devananda
அரசியல்இலங்கைசெய்திகள்

13ஐ அமுல்படுத்துக! – ரணிலிடம் டக்ளஸ் கோரிக்கை

Share

நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும், பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், அரசியலமைப்பின் அடிப்படையில் விடயங்களை முன்னகர்த்தி நாட்டிற்கு வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதே தன்னுடைய எதிர்பார்ப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதை ஆரம்பமாக கொண்டு முன்னோக்கி நகர்வததே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான நடைமுறை சாத்தியமான வழிமுறை என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 2
செய்திகள்உலகம்

லெபனான் மீது தரைவழித் தாக்குதல்: அனைத்து விருப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

லெபனானில் நிலவி வரும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அங்கு தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து...

02 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு மோதலால் இலங்கைக்கு எரிபொருள் தட்டுப்பாடு வராது: ரணில் விக்ரமசிங்க உறுதி!

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில்...

01 1
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு: பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் இன்று பெரிய அளவிலான உயர்வு காணப்பட்டுள்ளது. கடந்த சில...

29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு பின்னால் வீசப்பட்ட கரு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின்...