3 17
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியக்குழு

Share

இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியக்குழு

நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவே இலங்கைக்கு வருகைதரவுள்ளது.

இந்தக்குழு, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள், நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னைய ஒப்பந்தங்களின் நமைமுறையாக்கம் போன்றவற்றை மதிப்பீடு செய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீளாய்வுக்கு பின்னர் இலங்கைக்கான அடுத்த தவணை கடனை, சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எதிர்வரும் ஜனவரி அளவில் இந்த கடன் தவணையை தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...