அரசியல்இலங்கைசெய்திகள்

IMF கடனால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை!

Share
Vimal
Share

” சர்வதேச நாணய நிதியம் என்ற கோவிலில் காணிக்கை கட்டுவதால் மட்டும் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. நாமும் தீர்வை தேட வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” நாம் தொடர்ச்சியாக பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. தீர்வு திட்டத்தை முன்வைக்கும் வகையிலேயே புதிய கூட்டணியை உருவாக்கின்றோம். அதன் அங்குராப்பண நிகழ்வு எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் இணையுமாறு அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியம் ஒரு தொகை கடனை வழங்குவதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா, அவ்வாறு தீர்ந்துவிடும் என நினைப்பவர்களும் உள்ளனர். ஆனால் அது உண்மையல்ல. நாமாக எழுந்து நிற்கும் தீர்வை தேட வேண்டும்.” – என்றார் விமல்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...