1 6
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களின் வருமானத்தில் ஏற்படவுள்ள சாதகமான மாற்றம்

Share

இலங்கை மக்களின் வருமானத்தில் ஏற்படவுள்ள சாதகமான மாற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் தவணை மூலம் வருமானத்தை பெருக்க பல வாய்ப்புகள் உருவாகும் எனவும் பொருளாதார நன்மைகளை மக்கள் நேரடியாகப் பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர்.

மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்காத நாடாக மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்ல முடியும். இளைஞர்கள் அதிக வருமானம் பெறும் நாடாக மாற்றுவதுடன், அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என ராஜாங்க அமைச்சர்கள் மேலும் தெரிவித்தனர்.

நாட்டிற்கு புதிய முதலீடுகள் கொண்டு வரப்படும், வேலையில்லா திண்டாட்டம் நீங்கும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை சட்டப்பூர்வமாக்கும் மற்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

மூன்றாவது தவணை கடனைப் பெறுவது ஒரு நாடு என்ற வகையில் ஒரு பெரிய சாதனையாகும், இதன் மூலம் இழந்த சர்வதேச நிதி நம்பிக்கையை மீண்டும் பெற முடிந்தது.

மூன்றாவது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நிதிக் கட்டுப்பாட்டுக்கான சட்ட அமைப்பு வலுப்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட முறையின் கீழ் நாட்டின் வாகன இறக்குமதி மீள ஆரம்பிக்கப்படும். வட்டி வீதக் குறைப்பின் அனுகூலத்தை வர்த்தகர்களுக்கு வழங்க மத்திய வங்கி தயாராக உள்ளதென ராஜாங்க அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...