இலங்கைக்கு கிடைக்கப்போகும் கடன் உதவி
இலங்கைக்கான மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பாக, எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அனுமதி வழங்கவுள்ளது.
அன்றைய தினம் இலங்கையின் கடன் தவணையை அங்கீகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது (Shehan Semasinghe) எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த அமர்வில் இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைசச்ர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அனைத்து நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மூன்றாவது கடன் தவணையாக இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ள கடன் தொகை 330 மில்லியன் டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.