tamilni 324 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல்

Share

சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல்

இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமான சேகரிப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை கொண்டுள்ளது.

எனினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான 2.9 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை இது தடம் புரளச் செய்ய வாய்ப்பில்லை என வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு வருட கடன் ஒப்பந்தத்தின் முதல் மறுஆய்வின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நிதியமைச்சராக இருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்தனர்.

இந்த நிலையில் முதல் மதிப்பாய்வை நிறைவேற்றுவதற்குத் தேவையான பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றமும் இதில் அடங்கும் என்று இலங்கை அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதிய குழு, தமது இரண்டு வார பயணத்தின் முடிவில் இன்று (27.09.2023) புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...