8 7 scaled
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு

Share

சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு

நாட்டில் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பு காரணமாக விலைகள் உயர்வடைந்துள்ளன.

இதனால் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக சட்ட ரீதியான மதுபான வகைகளுக்கான கேள்வியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் மதுவரித் திணைக்களத்திற்கு வருமான இலக்குகளை அடைவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு அரசாங்கம் 232 பில்லியன் ரூபா என்ற வருமான இலக்கினை வழங்கியுள்ளது.

எனினும் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மதுவரித் திணைக்களத்தின் மொத்த வருமானம் வெறும் 33 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபானம் அருந்திய பலர் விலை அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத மதுபான வகைகளை நுகரத் தொடங்கியுள்ளதாகவும் சிலர் மதுபான நுகர்வினை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...