1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

Share

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வழமை போன்று இம்முறையும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உயர்திரு.சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வுகளின் வரிசையில் கிராஅத் மௌலவி எம்.அஸ்லம் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. ரம்ழான் ஓர் பண்பாட்டுப் பாசறை எனும் தலைப்பில் மௌலவி எம்.ஏ.சி.எம்.அஜ்மல் அவர்களும், ரமழானும் சகவாழ்வும் எனும் தொனிப்பொருளில் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) அவர்களும் உரை நிகழ்த்தினர். யாழ் மாவட்ட முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் எஸ்.எம். நிஸ்தாக் அவர்களின் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது. அதான் மௌலவி பி.எம்.அஹ்சன் (அஸ்ரபி) அவர்களால் நிகழத்தப்பட்டது.

நிகழ்வின் போது யாழ் மாவட்ட முஸ்லிம்கள் சார்பில் யாழ்ப்பாணம் மர்யம் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகத்தினால் நினைவுக் கேடயம் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் அவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் விசேட இப்தார் நிகழ்வில் யாழ்ப்பாணம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், யாழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள், இளைஞர்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...