Bandula Gunawardane
இலங்கைசெய்திகள்

நிதி கிடைக்காவிட்டால் நாடு முடங்கும்!!

Share

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து  இன்றைய தினத்துக்குள் (20) கடன் உதவி கிடைக்கப் பெறாவிட்டால் இரண்டு வாரங்களுக்கும்  நாட்டை கொண்டு செல்ல முடியாது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

களுத்துறை விமானப்படை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், குறிப்பாக 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகத்திடமிருந்து இலங்கை கடன்பெறத் தொடங்கியதாகத் தெரிவித்த அவர், பணத்தை மீள செலுத்த முடியாத நிலையில் பணம் அச்சிடப்பட்டது என்றார்.

இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது என்றும் ஜனாதிபதியொருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது அரசியல்வாதி ஒருவரோ இதற்கு பொறுப்பேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த கடன் படுகுழியில் இருந்து வெளிவர உதவுமாறு உலகத்திடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த அவர், அதற்காக 28 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் இருந்து 20 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...