15 30
இலங்கைசெய்திகள்

சர்வதேச கிரிக்கட் சம்மேளன 2024 விருதுக்கான முதல் தேர்வு பட்டியலில் இலங்கை வீரர்

Share

சர்வதேச கிரிக்கட் சம்மேளன 2024 விருதுக்கான முதல் தேர்வு பட்டியலில் இலங்கை வீரர்

சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் ஐசிசி விருதுகள் 2024இன் முதல் தேர்வுப்பட்டியல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இந்தத் தேர்வுப்பட்டியலில் எட்டு நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் 2024 டிசம்பர் 29 மற்றும் 30 திகதிகளில்; ஐசிசி விருதுகள் 2024க்கான ஏழு தேர்வுப்பட்டியல்கள் வெளியிடப்படவுள்ளன.

வெற்றியாளர்களை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் முக்கிய குழு தேர்வு செய்யும். பின்னர் ,இது தொடர்பான முடிவுகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான போட்டியில் நான்கு வலுவான போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன்,பாகிஸ்தானின் சைம் அயூப், மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப் மற்றும் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் இறுதிப் பட்டியலில் இணைந்துள்ளனர்

ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தென்னாப்பிரிக்க அனைத்துத்துறை வீராங்கனை; அன்னெரி டெர்க்சன், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி, இந்தியாவின் சி;ரேயங்கா பட்டீல் மற்றும் அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜென்ட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் 12 விருதுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...