15 30
இலங்கைசெய்திகள்

சர்வதேச கிரிக்கட் சம்மேளன 2024 விருதுக்கான முதல் தேர்வு பட்டியலில் இலங்கை வீரர்

Share

சர்வதேச கிரிக்கட் சம்மேளன 2024 விருதுக்கான முதல் தேர்வு பட்டியலில் இலங்கை வீரர்

சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் ஐசிசி விருதுகள் 2024இன் முதல் தேர்வுப்பட்டியல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இந்தத் தேர்வுப்பட்டியலில் எட்டு நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் 2024 டிசம்பர் 29 மற்றும் 30 திகதிகளில்; ஐசிசி விருதுகள் 2024க்கான ஏழு தேர்வுப்பட்டியல்கள் வெளியிடப்படவுள்ளன.

வெற்றியாளர்களை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் முக்கிய குழு தேர்வு செய்யும். பின்னர் ,இது தொடர்பான முடிவுகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான போட்டியில் நான்கு வலுவான போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன்,பாகிஸ்தானின் சைம் அயூப், மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப் மற்றும் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் இறுதிப் பட்டியலில் இணைந்துள்ளனர்

ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தென்னாப்பிரிக்க அனைத்துத்துறை வீராங்கனை; அன்னெரி டெர்க்சன், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி, இந்தியாவின் சி;ரேயங்கா பட்டீல் மற்றும் அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜென்ட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் 12 விருதுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...