அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சியை விட்டு வெளியேறமாட்டேன்! – சாகர தெரிவிப்பு

Share
17 3 1 1
Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டின் பெரும்பான்மை பலம்கொண்ட அரசியல் கட்சியாகும். அந்தக் கட்சியைக் கைவிட்டு வேறு கட்சியொன்றுடன் இணைவதற்கு எந்தவித தீர்மானமும் கிடையாதென அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச , முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் வெற்றிகரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வேறுகட்சியுடன் இணைவதற்கு யோசிக்கும் வகையில் மூளைக் கோளாறு எதுவும் தமது கட்சியினருக்கு கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமது கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவித அவசியமும் கிடையாது. அத்தகைய மூளைக்கோளாறு எதுவும் இல்லை.

பொதுஜன பெரமுன மற்றும் அதனோடு இணைந்த சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்துள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அதுதொடர்பில் நான் அறியவில்லை. பெரும்பான்மை பலமுள்ள கட்சியொன்றை விடுத்து அதிகாரமற்ற கட்சியொன்றுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...