Rathakrishnan
இலங்கைஅரசியல்செய்திகள்

எனக்கு உரையாற்ற நேரம் போதாது: நேரத்தை தாருங்கள் சபையில் இராதா எம்பி!

Share

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுவதற்கு இராதாகிருஷ்ணன் எம்.பிக்கு எதிரணி 4 நிமிடங்களை ஒதுக்கியிருந்தது.

இராதாகிருஷ்ணன் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருக்கையில்,

‘இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் உள்ளன’ – என்று சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார்.

” இப்போதுதான் உரையாற்றவே ஆரம்பித்தேன். அதற்குள் நேரம் முடிந்துவிட்டதா? இந்த நேரம் எனக்குபோதாது, மேலதிக நேரத்தை தாருங்கள். ஆளுங்கட்சியில் இருந்தாவது நேரத்தை பெற்று தாருங்கள்.” – என்று ராதா கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மூன்று நிமிடங்களை ராதாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இணக்கம் தெரிவித்தார்.

தனது உரையின் முடிவில் இதற்காக ஆளுங்கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...