Rathakrishnan
இலங்கைஅரசியல்செய்திகள்

எனக்கு உரையாற்ற நேரம் போதாது: நேரத்தை தாருங்கள் சபையில் இராதா எம்பி!

Share

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுவதற்கு இராதாகிருஷ்ணன் எம்.பிக்கு எதிரணி 4 நிமிடங்களை ஒதுக்கியிருந்தது.

இராதாகிருஷ்ணன் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருக்கையில்,

‘இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் உள்ளன’ – என்று சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார்.

” இப்போதுதான் உரையாற்றவே ஆரம்பித்தேன். அதற்குள் நேரம் முடிந்துவிட்டதா? இந்த நேரம் எனக்குபோதாது, மேலதிக நேரத்தை தாருங்கள். ஆளுங்கட்சியில் இருந்தாவது நேரத்தை பெற்று தாருங்கள்.” – என்று ராதா கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மூன்று நிமிடங்களை ராதாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இணக்கம் தெரிவித்தார்.

தனது உரையின் முடிவில் இதற்காக ஆளுங்கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...