Rathakrishnan
இலங்கைஅரசியல்செய்திகள்

எனக்கு உரையாற்ற நேரம் போதாது: நேரத்தை தாருங்கள் சபையில் இராதா எம்பி!

Share

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுவதற்கு இராதாகிருஷ்ணன் எம்.பிக்கு எதிரணி 4 நிமிடங்களை ஒதுக்கியிருந்தது.

இராதாகிருஷ்ணன் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருக்கையில்,

‘இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் உள்ளன’ – என்று சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார்.

” இப்போதுதான் உரையாற்றவே ஆரம்பித்தேன். அதற்குள் நேரம் முடிந்துவிட்டதா? இந்த நேரம் எனக்குபோதாது, மேலதிக நேரத்தை தாருங்கள். ஆளுங்கட்சியில் இருந்தாவது நேரத்தை பெற்று தாருங்கள்.” – என்று ராதா கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மூன்று நிமிடங்களை ராதாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இணக்கம் தெரிவித்தார்.

தனது உரையின் முடிவில் இதற்காக ஆளுங்கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...