2 Basil Rajapaksa copy 800x500 1
அரசியல்இலங்கைசெய்திகள்

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே மீண்டும் வந்தேன்! – பஷில் அதிரடி

Share

“இரண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளவே மீண்டும் வந்தேன். அந்த இரு எதிர்பார்ப்புகளும் நிறைவேறின.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசியல் என்பதும் அரச நிர்வாகம் என்பதும் வேறு. அந்தவகையில் அரச நிர்வாகத்தில் இருந்து முழுமையாக விலகுகின்றேன். எனினும், அரசியல் பயணம் தொடரும். கட்சிக்காக என்னை அர்ப்பணிப்பேன்.

நெருக்கடியான சூழ்நிலையில், நிதி அமைச்சு பதவியை ஏற்கவே நான் நாடாளுமன்றம் வந்தேன். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது கவலை அல்ல. என்னால் முடிந்தளவு, மக்களுக்கு சேவையாற்றினேன். ஆனால் மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் நிறைவேற்ற முடியாமல்போனது.

நபர்கள் மாற்றத்தை அல்ல, சிஸ்டம் சேஜ்ஜைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நபர்கள் மாற்றத்தையே நாம் செய்கின்றோம். எதிர்காலத்திலாவது சிஸ்டம் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

எனக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டேன். வழக்குகளுக்கு முகங்கொடுப்பது பிரதான நோக்கமாக இருந்தது. கடைசி வழக்கில் இருந்தும் விடுதலை பெற்றுள்ளேன்.

அடுத்ததாக என்னால்தான் மஹிந்த ராஜபக்ச தோற்றார் என்றார்கள். எனவே, மஹிந்தவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர நினைத்தேன். இவ்விரண்டும்தான் எனது எதிர்ப்பார்ப்புகளாக இருந்தன. இவை நிறைவேறின. மாறாக நான் பதவிகளை இலக்கு வைக்கவில்லை.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...